Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை பெய்யும் என்று 17ம் தேதிதான் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது: முதல்வர் ஸ்டாலின்

Webdunia
வியாழன், 21 டிசம்பர் 2023 (18:21 IST)
தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்தபோது, கனமழை பெய்யும் என்று 17ம் தேதிதான் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது என்று கூறினார். செய்தியாளர்களிடம் முதல்வர் மேலும் கூறியதாவது:
 
17, 18ம் தேதிகளில் கனமழை பெய்யும் என்று 17ம் தேதிதான் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. மேலும் வானிலை ஆய்வு மையம் கணித்ததை விட பல மடங்கு அதிகமாக மழை பெய்திருக்கிறது. இது வரலாற்றில் இதுவரை இல்லாதது.
 
ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்ததை மக்கள் அறிவார்கள். காயல்பட்டினத்தில் 94 செ.மீ. மழை பெய்து அந்த பகுதியே வெள்ளக் காடாக மாறியது
 
150 ஆண்டுகள் இல்லாத மழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீவைகுண்டம், ஏரல் உள்ளிட்ட பகுதிகளில் நிலைமை மிக மோசமாக உள்ளன’ என்று தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் மேகவெடிப்பு: 4 பேர் பலி, 6 பேர் காயம்

ராமதாஸ் தலைமையில் பாமக பொதுக்குழு.. தந்தை அருகே மகளுக்கு இடம்.. அன்புமணி இனி அவ்வளவு தானா?

தூய்மை பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய கூடாது: விசிக தலைவர் திருமாவளவன்

சென்னையை அடுத்து மதுரையில்..! தூய்மை பணியாளர்கள் போராட்டம்! - நெருக்கடியில் திமுக!

பாவம் திருமாவளவன்.. சேரக்கூடாத இடத்தில் சேர்ந்துவிட்டார்! - வருந்திய எடப்பாடி பழனிசாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments