Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

Webdunia
புதன், 1 நவம்பர் 2023 (15:26 IST)
வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 
 
சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். 20க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களை ஆளுநர் நிலுவையில் வைத்திருப்பதாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த வழக்கு குறித்து அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். 
 
இதனை அடுத்து வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்துள்ளார். இந்த இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்துவது குறித்து ஆலோசனையும் நடந்து வந்ததாக கூறப்படுகிறது.  
 
திமுக கூட்டணியில் பாமக இணையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்து முதலமைச்சர் ஆலோசனை செய்து வருவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments