Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1-8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது எப்போது? முதல்வர் இன்று ஆலோசனை!

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (08:37 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன என்பதும் கல்லூரிகளுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் விரைவில் திறக்கும் என்று கூறப்படும் நிலையில் இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்து ஆலோசனை செய்ய உள்ளார் 
 
மேலும் வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களை திறப்பது உள்ளிட்ட ஆலோசனைகளை இன்று அதிகாரிகளுடன் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments