இன்றுடன் நிறைவடையும் ஊரடங்கு: முதல்வரின் புதிய அறிவிப்புகள் என்ன?

Webdunia
திங்கள், 10 ஜனவரி 2022 (07:20 IST)
தமிழகத்தில் கொரனோ வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு அன்று முழு நேர ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டது என்பதும் தற்போது பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் தெரிந்ததே.
 
இந்த நிலையில் தமிழக அரசு பிறப்பித்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 10ஆம் தேதியான இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில் ஊரடங்கு நீடிப்பது மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று ஆலோசனை செய்ய உள்ளார் 
 
இன்றைய ஆலோசனையில் என்னென்ன கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்? முழு ஊரடங்கு நீடிக்குமா? என்பது குறித்து ஆலோசனை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது 
சென்னை உள்பட ஒரு சில நகரங்களில் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதால் ஒரு சில நகரங்களில் மட்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது
 
இன்றைய ஆலோசனை முடிந்த பின்னர் முதல்வரிடம் இருந்து விரிவான அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரெப்போ வட்டி விகிதத்தில் என்ன மாற்றம்? ரிசர்வ் வங்கி கவர்னரின் முக்கிய அறிவிப்பு..!

பங்குச்சந்தை மட்டுமல்ல, தங்கம் வெள்ளி விலையும் உச்சம்.. ஒரே நாளில் 2,720 ரூபாய் உயர்ந்த தங்கம்..!

போர் நிறுத்த அறிவிப்பு எதிரொலி: உச்சத்திற்கு சென்ற பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 2700 புள்ளிகள் உயர்வு..!

கங்கை நதியில் பீர் அருந்தும் இளைஞர்களின் வீடியோ.. உபி பாஜக அரசுக்கு கடும் கண்டனங்கள்..

போர் நிறுத்த அறிவிப்பு எதிரொலி.. தலைகீழாக குறைந்த கச்சா எண்ணெய் விலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments