Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம்: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்..!

Webdunia
புதன், 13 டிசம்பர் 2023 (17:42 IST)
நாடாளுமன்றத்தில் இன்று நடந்த அத்துமீறல் சம்பவத்திற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
இன்று நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென மர்ம நபர்கள் இருவர் பார்வையாளர்கள் பகுதியில் இருந்து நாடாளுமன்றத்தின் பகுதிக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தினர். அந்த இருவரையும் தற்போது காவல்துறையினர் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் புதிய நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் இன்று இருவர் நுழைந்த நிலையில் நாளை துப்பாக்கியுடன் தீவிரவாதிகள் ஏன் நுழையக்கூடாது என்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
 இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு குளறுபடியால் நமது ஜனநாயக கோவிலான நாடாளுமன்றத்திற்கு ஆபத்தான அச்சுறுத்தல் என்றும் அத்துமீறல் சம்பவம் தொடர்பாக தாமதம் இன்றி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

திடீரென தமிழகம் வருகிறார் அமைச்சர் அமித்ஷா.. ஈபிஎஸ், ஓபிஎஸ் உடன் சந்திப்பா?

இனி ஆதார் அட்டை தேவையில்லை.. முகம் ஒன்றே போதும்: மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு..!

ஜிப்லி புகைப்படம் எடுத்தால் சைபர் குற்றமா? காவல்துறை எச்சரிக்கை..!

2 வருடங்கள் தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜி சகோதரருக்கு உடனே ஜாமின்.. நீதிபதி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments