Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் முதலீடு செய்ய வாருங்கள் 5 முன்னணி நிறுவனங்களுக்கு முதல்வர் அழைப்பு

Webdunia
திங்கள், 13 ஜூலை 2020 (18:36 IST)
ஒருபுறம் தமிழகம் கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகம் ஏற்படுத்திக் கொண்டு வந்தாலும் இன்னொருபுறம் தொழில் நிறுவனங்களை முதலீடு செய்ய தமிழக முதல்வர் அழைப்பு விடுத்து வருகின்றார் 
 
ஏற்கனவே உலகில் உள்ள முன்னணி நிறுவனங்களுக்கு தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தற்போது இந்து முன்னணி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து கடிதம் எழுதியுள்ளார்
 
முன்னணி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களான பெடக்ஸ், யுபிஎஸ் தலைவர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். அதுமட்டுமின்றி சவுதி அரெம்கா, எக்ஸன் மொபில் கார்ப், சிபிசி பெட்ரோல் கெமிக்கல் நிறுவனங்களுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்
 
தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை செய்யும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு சிறப்பான ஆதரவு, ஊக்கச் சலுகைகளை வழங்கிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வரின் இந்த அழைப்பை ஏற்று முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments