Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆயுத பூஜைக்கு தியேட்டர் திறக்கப்படாது! – முதல்வரால் உரிமையாளர்கள் கவலை

Webdunia
புதன், 21 அக்டோபர் 2020 (10:25 IST)
தமிழகத்தில் திரையரங்குகளை ஆயுத பூஜை முதலாக திறக்க அனுமதி கோரிய நிலையில் ஆயுத பூஜை அன்று திரையரங்குகள் திறக்கப்படாது என்று தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன. பின்னர் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு பல்வேறு தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்களும் திறக்கப்பட்டுவிட்ட நிலையில் திரையரங்குகள் திறக்க இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லை.

இதுகுறித்து தொடர்ந்து சினிமா துறையினரும், திரையரங்க உரிமையாளர்களும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தற்போது வரவிருக்கும் ஆயுத பூஜை அன்று திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என கேட்டிருந்தனர். இதுகுறித்து முதல்வர் ஆலோசனை செய்து முடிவெடுப்பார் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பது குறித்து வரும் 28ம் தேதி சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் முன்னதாக 25ம் தேதி தியேட்டர்கள் திறக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேரூர் ஆதீனத்தில் துவங்கிய “ஒரு கிராமம் ஒரு அரச மரம்” திட்டம்! - தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்த இலக்கு!

ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டு.. சட்டசபை பதிலுரையை புறக்கணித்த வேல்முருகன்!

பட்டப்பகலில் பட்டாக்கத்தி வீசிய கும்பல்! பிரபல ரவுடி கொடூரக் கொலை! - காரைக்குடியில் அதிர்ச்சி!

வீட்டுக்கடன் மோசடி.. விஷாலின் தங்கை கணவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு!

பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம்! அரசின் திட்டத்தை தனியாளாக தொடங்கிய பிரபல யூட்யூபர்!

அடுத்த கட்டுரையில்
Show comments