Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் பழனிச்சாமிக்கு கொரோனா பரிசோதனை! – முடிவுகள் வெளியானது!

Webdunia
செவ்வாய், 14 ஜூலை 2020 (09:35 IST)
தமிழக அமைச்சர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அமைச்சர்கள் சிலருக்கே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் கே.பி அன்பழகன், தங்கமணி, செல்லூர் ராஜூ ஆகியோருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில் நேற்று தமிழக முதல்வர் மற்றும் அவருடன் பணிபுரியும் ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில் அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

சாமிக்கு ஆரத்தி எடுப்பதில் பூசாரிகளுக்குள் சண்டை.. கத்திக்குத்தால் ஒருவர் கொலை..!

கோடையில் மின்வெட்டு வராது.. அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதிமொழி..!

தமிழ்நாட்டில் தினமும் 5 கொலைகள்: இது தான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமா? அன்புமணி

தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.. தமிழக அரசின் அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments