Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்கள் போராட்டத்தால் மிரண்டது அரசு: முதலமைச்சர் அவசர ஆலோசனை!

மாணவர்கள் போராட்டத்தால் மிரண்டது அரசு: முதலமைச்சர் அவசர ஆலோசனை!

Webdunia
புதன், 18 ஜனவரி 2017 (11:17 IST)
மாணவர்களின் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தால் தமிழகம் உணர்ச்சிப்பெருக்கால் போராட்டக்களமாக மாறியுள்ளது. மாணவர்கள் படையின் முன் அரசின் அதிகாரம் அடக்குமுறை அனைத்தும் தவிடுபொடியாகியுள்ளது. இதனால் தமிழக அரசு மிரண்டு போயுள்ளது.


 
 
மாணவர்களின் தொடர் போராட்டம் அரசை ஆள்பவர்களை கலங்க வைத்துள்ளது. நாட்கள் ஆக ஆக போராட்டம் தீவிரமடைந்து வருவதால் நிலமை மோசமாகி வருகிறது என்பதை அரசு உணர தொடங்கியுள்ளது. இதனால் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
 
மாணவர்களின் போராட்டம் குறித்து DGP ராஜேந்திரன், சென்னை காவல் ஆணையருடன் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமைச்செயலகத்தில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த போராட்டம் எந்த விதமான சட்டம், ஒழுங்கு பிரச்சனையாக மாறிவிட கூடாது என ஆலோசனை நடத்தி வருகிறார்.
 
மேலும் தமிழக அமைச்சர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். முதல்வர் பன்னீர்செல்வம் இன்று இது குறித்து அறிக்கை வெளியிடுவார் என அமைச்சர்கள் உறுதியளித்ததாக தகவல்கள் வருகின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments