Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா பொதுச்செயலாளர்: கதறி அழுதார் முதல்வர் பன்னீர்செல்வம்!

சசிகலா பொதுச்செயலாளர்: கதறி அழுதார் முதல்வர் பன்னீர்செல்வம்!

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2016 (10:29 IST)
முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் முதன் முறையாக அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக தலைமை பொறுப்பு சசிகலாவிடம் ஒப்படைக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


 
 
இந்த பொதுக்குழு கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கிய தீர்மானமாக அதிமுக தலைமை பொறுப்பை வி.கே.சசிகலாவிடம் ஒப்படைப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
முன்னதாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதனை முதல்வரும் அதிமுக பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் வாசித்தார். அப்போது அவர் கண் கலங்கி அழுதார். பன்னீர்செல்வம் அழுததும் அங்கு வீற்றிருந்த அனைத்து உறுப்பினர்களும் கண் கலங்கினர். மேலும் மேடைக்கு முன்னதாக அமர்ந்திருந்த பெண் ஒருவர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டபோது கதறி அழுத காட்சி அனைவரையும் உருக வைத்தது.
 

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments