மனு கொடுத்த இரண்டு மணி நேரத்தில் அரசு பணி: முதல்வர் ஈபிஎஸ் அசத்தல்!

Webdunia
புதன், 11 நவம்பர் 2020 (14:50 IST)
மனு கொடுத்த இரண்டு மணி நேரத்தில் அரசு பணி:
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தற்போது கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. அவர் இன்று பேசிய நிகழ்ச்சி ஒன்றில் பல்வேறு புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்
 
இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காரில் தூத்துக்குடியில் காரில் சென்று கொண்டிருக்கும் போது மாற்று திறனாளி பெண் ஒருவர் முதல்வரை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தார். தனக்கு அரசுப்பணி வேண்டும் என்று கேட்டு அவர் அளித்த மனுவை வாங்கி பரிவுடன் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
 
சாலையோரம் நின்று முதலமைச்சரிடம் அரசு  வேலை கேட்டு மனு அளித்த மாற்றுத்திறனாளிகளுக்கு அடுத்த இரண்டு மணி நேரத்தில் பணி நியமன ஆணை வந்தது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
 
தமிழக வரலாற்றில் மனு கொடுத்த இரண்டு மணி நேரத்தில் அரசு வேலை கிடைத்த பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பதும் முதல்வரின் சுறுசுறுப்பான நடவடிக்கைகளுக்கு அந்த பெண் தனது நன்றியை தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2000 நோட்டுகளில் 'பண மழை' : பெங்களூருவில் நூதன மோசடி செய்த 10 பேர் கைது!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தோல்வி: முதல் நாளே தோல்வியா? என்ன நடந்தது?

இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 500 புள்ளிகளுக்கு மேல் சரிவு.. இதுதான் காரணமா?

சாம்சங் கேலக்ஸி AI-இல் குஜராத்தி உள்பட 22 மொழிகள்.. மேலும் என்னென்ன வசதிகள்?

ரயில்வே பணியாளரிடம் பெட்சீட் கேட்ட ராணுவ வீரர் கொலை.. ஏசி கோச்சில் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments