Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளாஸ்டிக் தடை எதிரொலி: மஞ்சப்பை, தூக்குவாளிக்கு மாறிய மக்கள்

Webdunia
புதன், 2 ஜனவரி 2019 (07:41 IST)
நேற்று முதல் தமிழகத்தில் ஒருசில பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் மக்களும் வியாபாரிகளும் மஞ்சப்பைக்கு மாறி, அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருவது ஆச்சரியத்தை அளித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக கேரிபேக் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது பலர் மஞ்சப்பைக்கு மாறிவிட்டனர். காரிலும் டூவீலர்களிலும் செல்லும்போது உடன் மஞ்சப்பையை எடுத்து செல்வது நேற்று முதல் அரங்கேறியுள்ளது. அதேபோல் பார்சல் டீ வாங்குபவர்கள் தூக்குவாளியுடன் வருவதையும் பார்க்க முடிகிறது. மேலும் நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு டீக்கடையில் ரூ.150 அட்வான்ஸ் பணம் பெற்றுக்கொண்டு தூக்குவாளி டீக்கடையிலேயே வழங்கப்படுகிறது. தூக்குவாளியை மீண்டும் கொடுத்துவிட்டு ரூ.150ஐ பெற்று கொள்ளலாம்

அதேபோல் ஓட்டல்களில் சட்னி, சாம்பார் கட்டி கொடுக்க அலுமினியத்தால் ஆன கவர்கள் பயன்படுத்தப்படுகிறது. சென்னை உள்பட அனைத்து நகரங்களில் உள்ள ஓட்டல்களிலும் கேரிபேக்கிற்கு பதிலாக துணிப்பைகள் பயன்படுத்தப்படுகிறது. ஒரே ஒரு சட்டம் ஒட்டுமொத்த தமிழகத்தையே பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிராக மாறிவிட்டது உண்மையிலேயே பெரும் மாற்றமாக கருதப்படுகிறது. இதே நிலை நீடித்தால் தமிழகம் சுற்றுச்சூழலை காப்பதில் முதலிடம் பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

ஆந்திராவுக்கு வந்துவிட்டது ஜிபிஎஸ் நோய்.. 2 பேர் பலி.. தமிழகம் சுதாரிக்குமா?

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments