Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகை, ஜவுளிக்கடைகளில் அமோக கூட்டம்: இதுதான் ‘விடியல்’ ஆட்சியா?

Webdunia
ஞாயிறு, 23 மே 2021 (14:48 IST)
நகை, ஜவுளிக்கடைகளில் அமோக கூட்டம்: இதுதான் ‘விடியல்’ ஆட்சியா?
கடந்த ஆட்சியில் எடுக்கப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை குற்றம் கூறிய திமுக தற்போது ஆட்சியில் இருக்கும்போது செய்யும் கூத்துக்களை பார்த்து நெட்டிசன்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் 
 
கொரனோ வைரஸ் பாதிப்பு 35 ஆயிரத்திற்கும் மேல் சென்று கொண்டிருக்கும் நிலையில் அனைத்து கடைகளும் திறக்கலாம் என்று கூறியது முட்டாள்தனமான முடிவு என்றும் மக்கள் தற்போது கொரோனா வைரஸ் குறித்த பயத்தை நீக்கி ஜவுளிக் கடைகளிலும் நகைக் கடையிலும் குவிந்து வருகிறார்கள் என்றும் இதன் விளைவு இன்னும் ஒரு சில நாட்கள் கழித்து கடுமையாக இருக்கும் என்றும் எச்சரித்து வருகின்றனர் 
 
அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் திறக்க அனுமதிக்காமல் அனைத்து கடைகளும் திறப்பது என்ற முடிவை எப்படி தமிழக அரசு எடுத்தது என்று தெரியவில்லை என்று திமுக ஆதரவாளர்கள் பத்திரிக்கையாளர்களே விமர்சனம் செய்து வருகின்றார்கள் 
 
நகை கடைகள் ஜவுளிக்கடைகள் உள்பட அனைத்து கடைகளிலும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டம் அமோகமாக உள்ளது என்றும் இதுதான் ‘விடியல்’ ஆட்சியா என்றும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments