Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவண்ணாமலையில் மகாதீபம்: டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு: எத்தனை நாட்கள்?

Siva
செவ்வாய், 10 டிசம்பர் 2024 (08:04 IST)
திருவண்ணாமலையில் மகாதீப நிகழ்ச்சி நடைபெற இருப்பதை அடுத்து டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருவண்ணாமலையில் உலக புகழ் பெற்ற அருணாச்சலீஸ்வரர் கோயில் அமைந்துள்ள நிலையில், இந்த கோயிலுக்கு தமிழகத்தில் மட்டும் இன்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று கார்த்திகை தீபத் திருவிழா என்பதும், அந்த திருவிழா தற்போது நடைபெற்று வருகின்றதும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில், டிசம்பர் 13ஆம் தேதி மாலை 6 மணிக்கு சுமார் 2600 அடி உயரத்தில் உள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட இருக்கிறது. அன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தீபத் திருவிழாவை ஒட்டி கோவிலை சுற்றியுள்ள மதுக்கடைகளை டிசம்பர் 12 முதல் 14 வரை மூன்று நாட்களுக்கு மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மணலூர் பேட்டை சாலை, வசந்தம் நகர் மற்றும் திருமண கோபுர வீதி ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மார்க் கடைகள் மூன்று நாட்கள் மூடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய நடவடிக்கை பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் திருவிழாவின் அமைதியான முன்னேற்றத்திற்காக எடுக்கப்பட்டுள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்