Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்டாள் கோவிலில் இளையராஜாவுக்கு முழு மரியாதை வழங்கப்பட்டது: ஜீயர் விளக்கம்..!

Siva
திங்கள், 16 டிசம்பர் 2024 (16:30 IST)
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இளையராஜாவுக்கு அவமரியாதை செய்யப்பட்டதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், இளையராஜாவுக்கு ஆண்டாள் கோவிலில் முழு மரியாதை அளிக்கப்பட்டது என்றும், இளையராஜாவும் ஆண்டாள் தாயாரை பக்தியுடன் வழிபட்டு மன நிறைவுடன் சென்றார் என்றும் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், கோவில் நிர்வாகம் சார்பில், இளையராஜா மற்றும் மூன்று பேருக்கு ஆண்டாள் சூட்டிய மாலை, பட்டு வஸ்திரம் கட்டி மரியாதை செய்யப்பட்டதாகவும், அங்கு நடந்த இசை நிகழ்ச்சி மற்றும் பரதநாட்டு நிகழ்ச்சியை உங்களுடன் சேர்ந்து இளையராஜா கண்டுக்களித்ததாகவும் கோவில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஜீயர்களுடன் இளையராஜா சாமி தரிசனம் செய்ய சென்றபோது வசந்த மண்டபத்தை தாண்டி அர்த்த மண்டப வாசல் அருகே நின்றார். அப்போது, கோயில் அர்ச்சகர் சின்ன ஜீயரிடம், வசந்த மண்டபத்தில் நின்று சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று கூறியவுடன், இளையராஜாவும் அங்கேயே நின்று சாமி தரிசனம் செய்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments