Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்டாள் கோவிலில் இளையராஜாவுக்கு முழு மரியாதை வழங்கப்பட்டது: ஜீயர் விளக்கம்..!

Siva
திங்கள், 16 டிசம்பர் 2024 (16:30 IST)
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இளையராஜாவுக்கு அவமரியாதை செய்யப்பட்டதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், இளையராஜாவுக்கு ஆண்டாள் கோவிலில் முழு மரியாதை அளிக்கப்பட்டது என்றும், இளையராஜாவும் ஆண்டாள் தாயாரை பக்தியுடன் வழிபட்டு மன நிறைவுடன் சென்றார் என்றும் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், கோவில் நிர்வாகம் சார்பில், இளையராஜா மற்றும் மூன்று பேருக்கு ஆண்டாள் சூட்டிய மாலை, பட்டு வஸ்திரம் கட்டி மரியாதை செய்யப்பட்டதாகவும், அங்கு நடந்த இசை நிகழ்ச்சி மற்றும் பரதநாட்டு நிகழ்ச்சியை உங்களுடன் சேர்ந்து இளையராஜா கண்டுக்களித்ததாகவும் கோவில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஜீயர்களுடன் இளையராஜா சாமி தரிசனம் செய்ய சென்றபோது வசந்த மண்டபத்தை தாண்டி அர்த்த மண்டப வாசல் அருகே நின்றார். அப்போது, கோயில் அர்ச்சகர் சின்ன ஜீயரிடம், வசந்த மண்டபத்தில் நின்று சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று கூறியவுடன், இளையராஜாவும் அங்கேயே நின்று சாமி தரிசனம் செய்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அறிவிப்பு கூட வெளியிடாமல் திடீரென கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!

டெல்லி ஹுமாயூன் கல்லறை வளாகத்தில் மேற்கூரை இடிந்து 5 பேர் பலி

அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: தமிழக அரசியலில் பரபரப்பு

நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் மறைவு: முதல்வர், ஆளுநர் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல்

டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.. ஐரோப்பிய நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments