Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நள்ளிரவில் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல்....

J.Durai
புதன், 28 ஆகஸ்ட் 2024 (14:49 IST)
சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில் நேற்று பகல் நேரத்தில் பல முறை மின்தடை ஏற்பட்ட நிலையில் இரவு மின்சாரம் துண்டுக்கப்பட்டு நீண்ட ஆகியும் மீண்டும் மின்சாரம் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
 
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் நள்ளிரவில் பாடியநல்லூரில் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மின்வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மின்சாரம் பாதிப்பு குறித்து பணியாளர்கள் ஆய்வு செய்து பணியாற்றி வருவதாக சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
 
பேச்சுவார்த்தையின் போது பழுது சீரமைக்கப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது. சுமார் 1மணி நேரத்திற்கு மேல் நீடித்த சாலை மறியல் போராட்டம் காரணமாக சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments