Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செவ்வாய் கிரகத்தில் நிலத்திற்கு கீழே தண்ணீர்? – சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2022 (08:20 IST)
செவ்வாய் கிரகத்தில் நிலத்தின் கீழ் பரப்பில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்துள்ளதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு நாட்டு விண்வெளி ஆய்வு மையங்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. சீனாவும் சமீப காலத்தில் விண்வெளி ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தனக்கென தனி விண்வெளி நிலையத்தை கட்டமைக்க தொடங்கியுள்ள சீனா, செவ்வாய் கிரகத்திலும் தனது ஆய்வை மேற்கொண்டு வருகிறது.

இதற்காக செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக தியான்வென் – 1 என்ற விண்கலத்தை அனுப்பிய சீன விண்வெளி ஆய்வு மையம் அதன் மூலம் செவ்வாய் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

ALSO READ: 62.17 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!

இந்த ஆய்வில் செவ்வாய் கிரகத்தின் மேற்புறத்திற்கு கீழே தண்ணீர் இருப்பதற்கான தடயங்கள் தெரிய வந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் பல கோடி ஆண்டுகள் முன்னதாக தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த தகவல் செவ்வாய் ஆராய்ச்சியில் முக்கிய பங்காக கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments