Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீர்திருத்தப்பள்ளியில் இருந்து 17 சிறுவர்கள் தப்பி ஓட்டம்

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2015 (15:09 IST)
சென்னை, புரசைவாக்கத்தில் உள்ள கெல்லீஸ் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து 17 சிறுவர்கள் தப்பியோடிய சம்பவம் போலீஸாரிடைய பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு காவல் துறையினரால் கைது செய்யப்படும் 18 வயதுக்குள் இருக்கும் சிறுவர்களை அரசு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்து வைக்கப்படுகிறார்கள்.

சென்னை புரசைவாக்கம் கெல்லீஸில் உள்ள சீர்திருத்தப் பள்ளியில் தரைத் தளத்தில் 23 சிறுவர்களும்,முதல் தளத்தில் 20 சிறுவர்களும் இருந்தனர். இந்நிலையில், இன்று காலை காவலர்களை அதிகாரிகளை ஏமாற்றிவிட்டு 17 சிறுவர்கள் காம்பவுண்டு சுவரின் மேல் ஏறி குதித்து அங்கிருந்து தப்பியோடிவிட்டதாக சிறுவர் சீர்திருத்தப் பள்ளி காவலர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து தலைமைச் செயலக காலனி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தப்பியோடிய சிறுவர்களை பிடிக்க 3 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments