Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறுமியின் கொலுசை வைத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன்

சிறுமியின் கொலுசை வைத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன்
, வியாழன், 23 ஜூலை 2015 (12:48 IST)
7 வயது சிறுமியின் கால் கொலுசை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
விருதுநகர் பகுதியை சேர்ந்தவர் பாதமுத்து. இவர் தனியாக இருந்த ஒரு 7 வயது பெண் குழந்தையை தன் வீட்டுக்குள் அழைத்து சென்றுள்ளார். பின் அச்சிறுமியின் கால் கொலுசுவை கழற்றிகொண்டு மிரட்டி குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 
 
மேற்கண்ட இச்சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார். இதை விசாரித்த நீதிபதி பாதமுத்துவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்தற்கு ஓராண்டு சிறையும், அபராத தொகையும் அறிவிக்கப்பட்டது.
 
கொலுசு திருடியதற்காக 3 வருட சிறைத் தண்டனையும் 2 ஆயிரம் அபராதமும் செலுத்த வேண்டும் என நீதிபதி தீர்ப்பு விதித்தார். பாதமுத்து மீது மேலும் ஒரு பலாத்கார வழக்கு விசாரணையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil