தன்னை தானே கடத்தி கொண்ட சிறுவன்; தந்தைக்கு பணம் கேட்டு மிரட்டல்

Webdunia
வியாழன், 8 அக்டோபர் 2020 (11:05 IST)
சென்னையில் 14 வயது சிறுவன் தான் கடத்தப்பட்டதாக தந்தையிடம் பணம் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் 14 வயது சிறுவன் ஒருவன் ட்யூசன் வகுப்புக்காக சென்றபோது மாயமாகியுள்ளான். இந்நிலையில் சிறுவனின் தந்தைக்கு போன் கால் வந்துள்ளது. அதில் பேசிய நபர் சிறுவனை தாங்கள் பிடித்து வைத்துள்ளதாகவும், ரூ.10 லட்சம் கொடுத்தால்தான் சிறுவனை விடுவிப்போம் என்றும் கூறியுள்ளனர்.

இதனால் பதட்டமடைந்த சிறுவனின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதை தொடர்ந்து தேடுதல் வேட்டை மேற்கொண்ட போலீசார் சிறுவன் ட்யூசன் செல்லும் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆராய்ந்ததில் அவனை யாரும் கடத்தியதாக தெரியவில்லை. மிரட்டல் கால் வந்த எண்ணை ட்ரேஸ் செய்ததில் சிறுவனே மற்றொரு நபருடன் சேர்ந்து தந்தையிடம் பணம் பறிப்பதற்காக கடத்தல் நாடகம் செய்தது அம்பலமாகியுள்ளது. இந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments