Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனு கொடுக்க வந்த டிஆர் பாலுவை அவமதித்தேனா? தலைமைச்செயலாளர் விளக்கம்

Webdunia
வியாழன், 14 மே 2020 (20:05 IST)
தலைமைச்செயலாளரிடம் மனு கொடுக்க வந்தபோது, அவர் டி.வியைப் பார்த்துக்கொண்டு தங்களை அவமதித்ததாக திமுக எம்.பி டி.ஆர்.பாலு குற்றஞ்சாட்டிய நிலையில் இதுகுறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
 
கடுமையான பணிகளுக்கு இடையே திமுகவினருக்கு நேரம் வழங்கப்பட்டது. அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட்டு மனுக்கள் பெறப்பட்டது. அத்துடன் ஒரு லட்சம் மனுக்களைப் பிரித்து அனுப்புவது பெரும் பணி என்பதால், எத்தனை நாட்கள் ஆகும் தற்போது கூறமுடியாது என திமுகவினரிடம் தெரிவிக்கப்பட்டது.
 
ஆனால் எங்கள் சூழ்நிலையைப் புரிந்துகொள்ளாமல் திமுகவினர் பத்திரிகைகளில் தங்களை அவமதித்ததாகச் செய்திகள் வெளியிட்டுள்ளனர். உண்மையில் எனக்கு திமுகவையோ எதிர்க்கட்சித் தலைவரையோ அவமதிக்கும் எண்ணம் இல்லை. இவ்வாறு தலைமைச் செயலாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments