Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முப்படை அதிகாரிகளுடன் தலைமைச்செயலாளர் திடீர் ஆலோசனை

Webdunia
புதன், 6 டிசம்பர் 2017 (10:46 IST)
தமிழக தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் முப்படை அதிகாரிகளுடன் இன்று காலை 11.30 மணிக்கு ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.
 
சமீபத்தில் ஓகி புயல் கன்னியாகுமரி மாவட்டத்தை புரட்டி போட்ட நிலையில் இந்த புயல் காரணமாக ஆயிரக்கணக்கான மீனவர்கள் காணாமல் போயினர். இவர்களில் பெரும்பாலானோர் மீட்கப்பட்டுவிட்டாலும் இன்னும் ஒருசிலரின் நிலை என்னவென்று தெரியவில்லை
 
இந்த நிலையில்  சென்னை தலைமைச் செயலகத்தில் முப்படை அதிகாரிகளுடன் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இன்று ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். 
 
கடலில் சிக்கிய மீனவர்கள் மீட்பு மற்றும் கடல் எல்லைகளை விரிவுபடுத்துவது குறித்து அவர் முப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதாக கூறப்படுகிறது. மேலும் வட தமிழகத்தை நெருங்கும் புது புயலை சமாளிக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் அவர் விவாதிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments