Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்..!

Senthil Velan
புதன், 19 ஜூன் 2024 (17:20 IST)
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள  தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
 
கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்படுகின்றன. இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விக்குறியாகி உள்ளது. 
 
இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அதில், இலங்கை கடற்படையினர் நேற்று தமிழகத்தை சேர்ந்த 4 மீனவர்களை கைது செய்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். 
 
இதுவரை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தி உள்ளார்.

ALSO READ: குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்..! பிரதமருக்கு டெல்லி அமைச்சர் அதிஷி கடிதம்..!!
 
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் அடிக்கடி கைது செய்து வருகின்றனர் என்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதோடு மட்டுமல்லாமல், மீனவ சமுதாயத்தினரிடையே அச்ச உணர்வையும், நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்துவது கவலை அளிக்கிறது என்றும் அந்த கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுபான முறைகேடு வழக்கு.! கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு..!!

மைக்ரோசாப்டை பின்னுக்குத் தள்ளிய என்விடியா - பாத்திரம் கழுவியவரின் நிறுவனம் வென்றது எப்படி?

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 40-வது முறையாக நீட்டிப்பு.!

மாணவர்களின் கையில் கயிறு கட்டக்கூடாதா.? நீதிபதி சந்துருவின் பரிந்துரைக்கு பாஜக எதிர்ப்பு..!!

நீட் தேர்வு முறைகேடுக்கு வலுக்கும் எதிர்ப்பு.! போராட்டத்தை அறிவித்த திமுக..!!

அடுத்த கட்டுரையில்
Show comments