Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுவையில் பாஜக போட்டியிடும் என முதல்வர் ரெங்கசாமி அறிவிப்பு..! வேட்பாளர் தமிழிசை சௌந்தர்ராஜனா?

Prasanth Karthick
ஞாயிறு, 3 மார்ச் 2024 (11:18 IST)
புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ரெங்கசாமி அறிவித்த நிலையில் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



நாடாளுமன்ற தேர்தலுக்கு நாடே தயாராகி வரும் நிலையில் புதுச்சேரியில் பாஜக போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தை நிறைவடையாமல் இருந்து வந்தது. 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக (6), என்.ஆர் காங்கிரஸ் (10) இணைந்து ஆட்சியமைத்தனர். அதன்படி என்.ஆர்.காங்கிரஸ் ரெங்கசாமி முதலமைச்சராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடுமா? பாஜக போட்டியிடுமா? என்ற கேள்வி தொடர்ந்து வந்தது. தற்போது தெலுங்கானா மற்றும் புதுச்சேரிக்கு துணை நிலை ஆளுனராக உள்ள முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் நீண்ட காலமாகவே எம்.பி சீட்டுக்காக காய்களை நகர்த்தி வருகிறார்.

ALSO READ: பா.ஜனதா கூட்டணியில் இருந்து இனி வெளியேற மாட்டேன்: பிரதமர் மோடியிடம் நிதிஷ்குமார் உறுதி

சமீபத்தில் ஒரு பேட்டியில் கூட, தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது ஆண்டவன் கையிலும், ஆள்பவர் கையிலும் உள்ளதாக கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது ஆள்பவர் பாஜகவுக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளார். புதுச்சேரியில் பாஜக – என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியிலிரிந்து பாஜக போட்டியிடும் என்றும், என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்றும் முதல்வர் ரெங்கசாமி அறிவித்துள்ளார்.

வேட்பாளர் குறித்து கேட்டபோது அதை பாஜக தலைமை அறிவிக்கும் என கூறியுள்ளார். பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் தமிழகம் இடம்பெறவில்லை. ஆனால் இரண்டாவது கட்ட பட்டியலில் தமிழ்நாடு, புதுச்சேரி வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழிசை சௌந்தர்ராஜன் புதுச்சேரியின் கவர்னராக அம்மக்களிடையே அறியப்பட்டவர் என்பதால் அவருக்கு புதுச்சேரி தொகுதியில் பாஜக சீட் வழங்க வாய்ப்புள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments