Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு சொல்வதை கேட்டிருந்தால் கொரோனா பரவியிருக்காது! – எடப்பாடியார் வருத்தம்!

Webdunia
புதன், 3 ஜூன் 2020 (08:48 IST)
சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் அரசின் அறிவுரையை முறையாக பின்பற்றவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருத்தம் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தமிழகத்தின் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளதால் ஐந்தாம் கட்டமாக ஜூன் இறுதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார்.

பிறகு பேசிய அவர் “தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சென்னை மட்டுமே அரசுக்கு சவாலாக உள்ளது. மக்கள் அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்றியிருந்தால் இந்த அளவுக்கு பாதிப்பு இருந்திருக்காது. மக்கள் அரசுக்கு முழு ஆதரவு தர வேண்டும்” என கூறியுள்ளார்.

மேலும் பிசிஆர் கருவிகள் குறித்து மு.க.ஸ்டாலினின் குற்றசாட்டுகள் பற்றி பேசியுள்ள முதல்வர் “பிசிஆர் கருவிகள் குறித்த மு,க.ஸ்டாலினின் குற்றசாட்டு தவறானது, விளம்பரத்திற்காகவே அவர் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை வைக்கிறார். தமிழகத்தில் அதிகமான வெண்டிலேட்டர்கள் இருந்தாலும் அவற்றின் பயன்பாடு மிகவும் குறைவாகவே உள்ளது” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை.. முதல்வர் ஆகிறாரா?

இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது டெஸ்லா கார்.. விலை எவ்வளவு தெரியுமா?

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments