Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆசிய செஸ் கூட்டமைப்பின் சிறந்த மனிதருக்கான விருது

Webdunia
வெள்ளி, 28 ஜூலை 2023 (21:18 IST)
சமீபத்தில்  44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை  தமிழ்நாடு அரசு நடத்தியது. இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு  2023ஆம் ஆண்டிற்கான ஆசிய செஸ் கூட்டமைப்பின் சிறந்த மனிதருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உதய நிதி ஸ்டாலின் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

’’மாண்புமிகு  முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய வழிகாட்டலில், 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை உலகமே வியக்கிற வகையில் கழக அரசு நடத்தியது. இதனை போற்றுகிற வகையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு  2023ஆம் ஆண்டிற்கான ஆசிய செஸ் கூட்டமைப்பின் சிறந்த மனிதருக்கான விருதினை (Man of the Year Award) ஆசிய செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவர் திரு.பரத் சிங் செளகான் உள்ளிட்டோர் இன்று வழங்கினார்கள். இந்த பெருமைமிகு நிகழ்வில் பங்கேற்று மகிழ்ந்தோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக,  ’’ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் சென்னை எழும்பூர் மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி ஸ்டேடியத்தில் ஆகஸ்ட் 3 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.

16 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் நடைபெறும் இந்த சர்வதேச ஹாக்கிப் போட்டிக்காக புனரமைக்கப்பட்டுள்ள Pavilion-ஐ இன்று ஆய்வு செய்தோம்.  இந்த சிறப்புக்குரிய Pavilion-ஐ மாண்புமிகு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அவர்கள் நாளை திறந்து வைக்கவுள்ளார்கள். இந்த நிகழ்வில் ஹாக்கி வீரர்களும் - ஆர்வலர்களும் திரளாக வருகை தந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்’’ என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments