Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை - கருணாநிதி

Webdunia
சனி, 28 பிப்ரவரி 2015 (16:05 IST)
மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை என்று கூறினார்.
 
சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்தது.
 
விழாவில் கலந்துகொண்டு திமுக தலைவர் கருணாநிதி பேசினார். அப்போது அவர் கூறுகையில், "ஆண்டுதோறும் இங்கே ஸ்டாலின் பிறந்தநாள் கூட்டத்தில் கலந்து கொள்கிறேன்.
 
வரவிருக்கிற காலங்களில் பல்வேறு சோதனைகளைக் கடந்து செல்வது எப்படி?, எவ்வாறு யாருடன் துணை வைத்து கொள்வது என்பது பற்றி அறிந்து கொள்வதற்காக இந்த விழா நடைபெறுவதாகக் கருதுகிறேன்.
 
எனக்கு முன்னால் பேசியவர்கள் நான் 6 ஆவது முறையாக முதலமைச்சராக வேண்டும் என்று கூறினார்கள். அந்த ஆசை எனக்கு இல்லை.
 
எனது ஆசை யெல்லாம் திமுகவை கட்டி காக்க வேண்டும் என்பதுதான். கடைசி தொண்டன் உள்ளவரை இந்த கழகத்தை எதிரிக்கு விட்டு கொடுக்க முடியாது" இவ்வாறு கருணாநிதி கூறினார்.

ஜூன் 4ஆம் தேதிக்கு பின் ராகுல் காந்தி ஒரு யாத்திரைக்கு செல்வார்.. அமித்ஷா கிண்டல்..!

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: பாஜகவின் 2 பிரபலங்கள் ஆஜராக சிபிசிஐடி சம்மன்..!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. இன்று எத்தனை மாவட்டங்களில் கனமழை?

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

Show comments