Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருத்துக் கணிப்புகள் பொய்.. எங்களுக்கு தான் தார்மீக வெற்றி கிடைத்துள்ளது: ப சிதம்பரம்

Mahendran
வெள்ளி, 7 ஜூன் 2024 (17:46 IST)
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் மக்களை முட்டாளாக்கியுள்ளது. கருத்துக் கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பு நடத்தப்பட்டு, மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர். தேர்தல் முடிவுகள் அனைத்து கட்சியினருக்கும் படிப்பினைதான். சில் மாநிலங்களில் காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி எங்களுக்கு படிப்பினையாக உள்ளது என முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
 
மேலும் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம், கொண்டாடுகிறோம் அதில் மோடிக்கு என்ன பிரச்னை? தேர்தலில் காங்கிரஸுக்கு தார்மீக வெற்றி கிடைத்துள்ளது.  தோல்வி என்பது பிரதமர் மோடிக்குதான், பாஜக ஆட்சி நிலைக்குமா? என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும் என்றும் ப சிதம்பரம் கூறினார்.
 
மேலும் வாக்குப்பதிவு இயந்திரத்தை செம்மை படுத்த வேண்டும் என்றும், விவிபேட் இயந்திரத்தில் இருந்து வரும் ஒப்புகை தாளை, வாக்காளர்கள் எடுத்து பார்த்துவிட்டு பெட்டியில் போடலாம் என்பது தான் காங்கிரசின் கோரிக்கை என்றும், இன்னுமும் மக்கள் ஈவிஎம் இயந்திரத்தை சந்தேகிக்க தான் செய்கிறார்கள் என்றும் ப சிதம்பரம் தெரிவித்தார்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணிப்பூர் மக்களின் கோபத்தின் அடையாளமான நிற்கிறேன்! பதில் சொல்லுங்க!? - நாடாளுமன்றத்தை தெறிக்கவிட்ட கல்லூரி பேராசிரியர்!

தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

மதமாற்றத்தை அனுமதித்தால் பெரும்பான்மையினர் சிறுபான்மையினராக மாறி விடுவார்கள்: அலகாபாத் உயர்நீதிமன்றம்

நீட் தேர்வுக்கு எதிராக பரபரப்பு பேச்சு.. கல்வி விழாவில் விஜய் பேச்சுக்கு குவியும் பாராட்டு..!

நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி பரிதாப பலி! கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments