Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாமி கும்பிட வந்த பெண் சாதி சொல்லி அனுமதி மறுப்பு! – தீட்சிதர்கள் மேல் வழக்குப்பதிவு!

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (13:29 IST)
சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண் ஒருவர் சாதிய ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக தீட்சிதர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் மிகவும் பிரபலமானது. இங்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்தும் கூட பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகை புரிகின்றனர்.

இந்நிலையில் பழைய புவனகிரி சாலையை சேர்ந்த ஜெயசீலா என்பவர் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்றுள்ளார். அங்குள்ள கனகசபை மீது ஏறி அவர் தரிசனம் செய்ய முயன்றுள்ளார். ஆனால் கனகசபை மீது பக்தர்கள் ஏறக்கூடாது என ஜெயசீலாவை தடுத்த தீட்சிதர்கள் அவரை சாதிய ரீதியாக இகழ்ந்து பேசி வெளியே அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஜெயசீலா அளித்த புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 20 தீட்சிதர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments