Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உளுந்து, துவரம் பருப்பு குறைந்த விலைக்கு விற்பனை! – உணவுத்துறை நடவடிக்கை!

Webdunia
வெள்ளி, 14 ஜூலை 2023 (08:14 IST)
தமிழ்நாட்டில் உணவு பொருட்கள் விலை அதிகரித்து வரும் நிலையில் கொள்முதல் விலைக்கே விற்பனை செய்ய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.



தமிழ்நாட்டில் தக்காளி விலை உயர்வை தொடர்ந்து துவரம் பருப்பு, உளுந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்வை சந்தித்துள்ளது. இதனால் பொதுமக்கள் உணவு பொருட்களை வாங்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தக்காளி விலை உயர்வை அடுத்து ரேசன் கடைகள், அரசு பசுமைப் பண்ணைகள் மூலமாக குறைந்த விலைக்கு தக்காளி மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல தற்போது விலை உயர்ந்துள்ள உளுந்து மற்றும் துவரம் பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் அமுதம் அங்காடிகள் மூலமாக கொள்முதல் விலைக்கே விற்பனை செய்யப்படுகின்றன.

அதன்படி உளுந்து 500 கிராம் ரூ.60க்கும், துவரம் பருப்பு 500 கிராம் ரூ.75க்கும், தக்காளில் கிலோ ரூ.60க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை பழைய நிலைக்கு திரும்பும் வரை இந்த விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments