Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரந்தூரில் சென்னையின் 2வது விமான நிலையம்!!

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (15:27 IST)
சென்னையில் 2வது விமான நிலையம் பரந்தூரில் அமையவுள்ளது என்று மாநிலங்களவையில் அறிவிப்பு.


சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக சென்னை மக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் தற்போது அது இறுதி வடிவம் பெற்றுள்ளது.

ஏற்கனவே சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான 4 இடங்களை தமிழக அரசு தேர்வு செய்து இருந்தது. இந்த நான்கு இடங்களில் பரந்தூர் மற்றும் பன்னூர் ஆகிய இரண்டு இடங்களில் மத்திய அரசு பரிசீலனை செய்து வந்தது.

இவற்றில் ஒன்றில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் ஆகும் என்றும் கூறப்பட்டது. குறிப்பாக சென்னையின் 2வது விமான நிலையம் பரந்தூரில் அமைய அதிக வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் கூறி இருந்தனர்.

இந்நிலையில் சென்னையில் 2வது விமான நிலையம் பரந்தூரில் அமையவுள்ளது என்று மாநிலங்களவையில் மத்திய விமான போக்குவரத்து இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். இறுதி செய்யப்பட்ட இடத்திற்கு மாநில அரசு இட அனுமதியை வழங்க வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் பொய்: ஒரு பொய்யின் விளைவு என்ன என்பதை இப்போதாவது ஸ்டாலின் உணர்வாரா? ஈபிஎஸ் கேள்வி..!

மீண்டும் ஒரு புல்டோசர் நடவடிக்கை.. நூற்றுக்கணக்கான கட்டிடங்களை தரைமட்டம் ஆக்கிய 50 ஜேசிபிக்கள்

பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே புதிய கார்கள் பதிவு செய்ய முடியும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

தமிழகத்தில் 66 பேருக்கு கொரோனா!? இந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு!

பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்.. இம்ரான்கான் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments