Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நல்ல வருமானம்; ஆனாலும் ஆன்லைன் சூதாட்ட மோகம்! – இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

Webdunia
செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (10:48 IST)
புழல் அருகே தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் அளவுக்கதிகமாக ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புழல் அருகே உள்ள சூரப்பட்டு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் தினேஷ். இவருக்கு சரண்யா என்ற பெண்ணுடன் திருமணம் ஆன நிலையில் செங்குன்றம் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர்.

போதிய அளவு வருமானத்துடன் எளிமையாக வாழ்ந்து வந்த தினேஷுக்கு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டின் மீது மோகம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் தனது சம்பாத்திய பணத்தை சூதாட்டத்தில் இழந்தது மட்டுமல்லாமல், மேலும் பல இடங்களிலும் ஆயிரக்கணக்கில் கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த தினேஷ் மனைவி வீட்டில் இல்லாத சமயம் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கு சூதாட்டம் மட்டுமே காரணமா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments