Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னைவாசிகளுக்கு ஷாக் நியூஸ்.. சிட்டிக்கு மழை இல்லயாம்

Webdunia
வெள்ளி, 9 நவம்பர் 2018 (14:52 IST)
நவம்பர் மாதம் முதல்தேதி முதல் வடகிழக்கு பருவமழை துவங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், அறிவிப்பு வெளியான உதல் இரண்டு நாட்களுக்கும் மட்டும் நல்ல மழை பொழிந்தது. அதன் பின்னர் மழைக்கான அறிகுறி கூட தெரியவில்லை. 
 
இந்நிலையில், மழை குறித்த செய்தியை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதாவது, தாய்லாந்து வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள மலையடிவாரத்தில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது அந்தமான் பகுதியில் நிலவிவருகிறதாம். 
 
அடுத்து மூன்று தினங்களில் இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்ற புயலாக மாற வாய்ப்புள்ளதாம். இதனால் நாளை முதல் 13 ஆம் தேதி வரை அந்தமான் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தூத்துக்குடி, திருச்சந்தூர், திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாம். அதோடு, சென்னைக்கு தற்போது சுத்தமாக மழைக்கான வாய்ப்பு இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments