Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இடைவிடாத மழை துவங்கும்... வெதர்மேன் அப்டேட்!

Webdunia
செவ்வாய், 9 நவம்பர் 2021 (13:37 IST)
சென்னையில் சில இடங்களில் தற்போது நல்ல மழை பெய்ய தொடங்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல். 

 
கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தென் மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி தமிழகத்தை கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது.  
 
இதனால் சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் மிக கனமழை அடுத்த 3 நாட்களுக்கு பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் சில இடங்களில் தற்போது நல்ல மழை பெய்ய தொடங்கும் என தமிழ்நாடு வெதர்மேன் தகவல் தெரிவித்துள்ளார். 
 
தற்போது வேதாரண்யம் முதல் திருவாரூர் வரை உள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடலூரில் இருந்து சென்னை, திருவள்ளூர் பெல்ட் வரை  10 ஆம் தேதி நண்பகல், மாலை, இரவு தொடங்கி 11 ஆம் தேதி காலை, மதியம், மாலை வரை இடைவிடாமல் கனமழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

புகையிலை பொருட்களுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு..! தமிழக அரசு உத்தரவு..!!

வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ; 14 பேர் உடல் கருகி சாவு!

8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!

சிறுமியிடம் ஆபாச செய்கை செய்தவர் போக்சோவில் கைது!

மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தரிசனம்-கொடி மரத்தில் தியானம்....

அடுத்த கட்டுரையில்
Show comments