படிக்காமலேயே பட்டம் பெற்ற 117 பேர்களின் தேர்வு முடிவுகள் ரத்து: சென்னை பல்கலை அதிரடி

Webdunia
புதன், 22 டிசம்பர் 2021 (08:58 IST)
படிக்காமலேயே பட்டம் பெற்ற 117 பேர்களின் தேர்வு முடிவை சென்னை பல்கலைக்கழகம் ரத்து செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடைபெற்றது. தொலைதூர கல்வி பயிலும் மாணவர்கள் என குறிப்பிட்டு முறைகேடாக 117 பேர் இந்த தேர்வை எழுதி பட்டம் பெற்றது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
 
இதனை அடுத்து தேர்வு முறைகேடாக தேர்வு எழுதிய 117 பேர் தேர்வு முடிவுகளை ரத்து செய்வதாக சென்னை பல்கலைக்கழகம் அதிரடியாக அறிவித்துள்ளது 
 
தொலைதூர கல்வி மையங்கள் நடத்துவோர் ரூபாய் 3 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு மோசடியாக படிக்காதவர்களுக்கு சான்றிதழ் பெற்று தர முயற்சித்தது விசாரணையில் தெரிய வந்ததாக பல்கலைகழகம் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போலி வாக்காளர்களை நீக்கினால் நிர்மலா சீதாராமனை பாராட்ட தயார்: ஆர்.எஸ். பாரதி..!

மோடி - அமித் ஷா - ஞானேஷ் குமார் கூட்டணியினால் கிடைத்த வெற்றி: பீகார் குறித்து செல்வப்பெருந்தகை

ராகுல் காந்தியின் ‘வாக்குத்திருட்டு’ குற்றச்சாட்டை யாரும் நம்பவில்லை: காங்கிரஸ் பிரமுகர் திடீர் விலகல்..!

உலக வங்கி நிதியை திசை திருப்பி பெற்ற வெற்றி. NDA குறித்து ஜன் சுராஜ் குற்றச்சாட்டு

பீகார் முதலமைச்சர் யார்? அமித்ஷாவுடன் ஜெபி நட்டா தீவிர ஆலோசனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments