Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புத்தாண்டு கட்டுப்பாடு; ஹோட்டல்கள், கடற்கரையை மூட உத்தரவு – கடும் கண்காணிப்பில் சென்னை

Webdunia
புதன், 30 டிசம்பர் 2020 (13:34 IST)
நாளை மறுநாள் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னையில் உள்ளிட்ட மாநகரங்களில் புத்தாண்டு கொண்டாட கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் நாளை மறுநாள் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தமிழகம், மகராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட தடைகள் விதிக்கப்பட்டுள்ளம.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நட்சத்திர விடுதிகளில் கொண்டாட்டங்கள், மெரினா கடற்கரையில் கூடுதல் உள்ளிட்டவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகளில் மதுபான பார்களை நாளை இரவு 10 மணி முதல் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல நாளை இரவு 10 மணி முதல் மெரினா கடற்கரை மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னையின் பிரதான பகுதிகள், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் காவல் பணியில் காவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments