Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெட்ரோ ரயில் பணி எதிரொலி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

Webdunia
சனி, 26 பிப்ரவரி 2022 (16:52 IST)
சென்னையில் அடுத்த கட்ட மெட்ரோ பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஒரு சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:
 
1. சென்னை மவுண்ட் பூந்தமல்லி ஆவடி சாலையில் (sass) சென்னை பைபாஸ் சந்திப்பிலிருந்து (போரூர் ஏரி சிவன்கோயில் அருகில்) குமணன்சாவடி சந்திப்பு வரையிலான போக்குவரத்தில், இலகுரக வாகனங்கள் (கார், ஜீப், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்) செல்லவும் மற்றும் கனரக வாகனங்கள் (வேன்,டிரக், பால் மற்றும் வணிக
வாகனங்கள்) மாற்று வழியில் செல்லும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆம்புலன்களுக்கு விலக்கு அளித்து அவ்வாகனங்கள் அனுமதிக்கப்படும்.
 
2. போரூரிலிருந்து மவுண்ட் பூந்தமல்லி ஆவடி சாலையில் (31, 55) பூந்தமல்லி மற்றும் குமணன்சாவடி சந்திப்பு நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இதர வணிக வாகனங்கள், கட்டாயமாக மேற்படி சாலையில் இருந்து வலதுபுறம் திரும்பி மதுரவாயல் டோல்கேட் பைபாஸ் சந்திப்பு - பூந்தமல்லி நெடுஞ்சாலை, வானகரம், வேலப்பன்சாவடி, ஏசிஎஸ் மருத்துவ கல்லூரி, சவீதா பல்மருத்துவமனை சென்று இடதுபுறம் திரும்பி குமணன்சாவடி சந்திப்பு வழியாக அனுமதிக்கப்படும்.
 
3. சென்னை பூந்தமல்லி, மாங்காடு, சவிதா பல் மருத்துவமனை பகுதிகளில் இருந்து மவுண்ட் பூந்தமல்லி ஆவடி சாலையில் போரூர் நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இதர வணிக வாகனங்கள் குமணன்சாவடி சந்திப்பில் திரும்பி பூந்தமல்லி நெடுஞ்சாலை சென்று சவீதா பல் மருத்துவனை, ஏசிஏஸ் மருத்துவ கல்லூரி, வேலப்பன்சாவடி, வானகரம் வழியாக மதுரவாயல் பைபாஸ் சாலையில் சென்று சுங்கச்சாவடி அருகே இடது புறம் திரும்பி சமயபுரம் வழியாக போருர் நோக்கி செல்ல அனுமதிக்கப்படும்.
 
4. பொதுமக்கள் மேற்படி பணியினை விரைவில் முடிக்க முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
 
5.பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தங்களது ஆலோசனைகளை காவல் துணை ஆணையாளர் ஆவடி போக்குவரத்து அவர்களின் இணையதள முகவரியான depavadi traffic@gmail.com மற்றும் கட்டுமான பணி அதிகாரியின் இணையதள முகவரியான sundramoorthypekecpg.com அனுப்பலாம்.
 
6. மேலும் பொதுமக்களது ஆலோசனைகளை ஆவடி காவல் ஆணையரகத்தின் டிவிட்டர் http://twitter.com/avndipolice மற்றும் காவல் உதவி ஆணையாளர் ஆவடி போக்குவரத்து
 
கைப்பேசி எண்.8056217958 மற்றும் காவல் ஆய்வாளர் டி15 எஸ். ஆர். எம்.சி போக்குவரத்து அவர்களின் கைப்பேசி எண் 9498141613 மற்றும் ஆவடி போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டறை எண்.7305715666 க்கு தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது
 
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய குற்றவியல் சட்டம் நேற்று அமல்.. இன்று தமிழ்நாட்டில் முதல் வழக்குப்பதிவு..!

மோடியின் உலகில் உண்மைக்கு இடமில்லை.. அவை குறிப்பில் இருந்து நீக்கம் குறித்து ராகுல் கருத்து..!

ராகுல்காந்தி விளம்பரத்துக்காக பண்றார்.. 40 தமிழக எம்.பிக்களும் வேஸ்ட்! – தமிழிசை சௌந்தர்ராஜன் ஆவேசம்!

பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலையான சிலம்பம் கற்பது தற்போது அவசியம்!

பங்குச்சந்தை தொடர் ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments