Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில்: தேதி அறிவிப்பு..!

Webdunia
திங்கள், 3 ஜூலை 2023 (11:04 IST)
சென்னை சென்ட்ரல் மற்றும் திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் விரைவில் இயக்கப்பட விருப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது ஜூலை 7ஆம் தேதி முதல் இந்த ரயில் இயக்கப்பட இருப்பதாகவும் பிரதமர் மோடி காணொளி மூலம் இந்த ரயிலை தொடங்கி வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையிலான வந்தே பாரத் ரயில் ஜோலார்பேட்டையில் நின்று செல்லும் வகையில் பயணத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
மேலும் சென்னை - நெல்லை வந்தே பாரத் படுக்கை வசதியுடன் கூடிய ரயிலாக இயக்க வாய்ப்பு உள்ளது என்றும் ஆனால் அதே நேரத்தில் சென்னை சென்ட்ரல் திருப்பதி இடையிலான வந்தே பார்த் ரயிலில் அமர்ந்து செல்லும் இருக்கைகள் கொண்ட ரயிலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 
 
சென்னை - திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுவது பக்தர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் அரை மணி நேரம் தாமதமாக வரலாம்: அரசே கொடுத்த அனுமதி..!

திரும்ப பெறப்பட்ட டிஎஸ்பி வாகனம்.. நடந்தே அலுவலகம் வந்த வீடியோ வைரல்..!

நீட் தேர்வில் தோல்வி.. பொறியியல் படித்த மாணவி.. இன்று ரூ.72 லட்சத்தில் வேலை..!

தவெக கொடி விவகார வழக்கு: விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

பரோலில் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கைதி மீது துப்பாக்கி சூடு.. அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments