Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

Siva
வெள்ளி, 17 மே 2024 (11:32 IST)
பராமரிப்பு பணி காரணமாக வரும் 31ஆம் தேதி வரை திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
 
சென்னை சென்டிரலில் இருந்து காலை 6.25 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16057) வருகிற 31-ந்தேதி வரை ரேணிகுண்டா-திருப்பதி இடையே பகுதி நேரமாக ரத்துசெய்யப்படுகிறது. 
 
அதே தேதிகளில், திருப்பதியில் இருந்து மாலை 6.05 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16058) திருப்பதி-ரேணிகுண்டா இடையே பகுதி நேரமாக ரத்துசெய்யப்படுகிறது. 
 
அதேபோல, சென்னை சென்டிரலில் இருந்து மதியம் 2.25 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16053) வருகிற 31-ந்தேதி வரை ரேணிகுண்டா-திருப்பதி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. 
 
அதே தேதிகளில், திருப்பதியில் இருந்து காலை 10.10 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16054) திருப்பதி-ரேணிகுண்டா இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது" இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments