Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை - கன்னியாகுமரி இடையே வந்தே பாரத் ரயில்: பொதுமக்கள் கோரிக்கை

Webdunia
செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (09:44 IST)
தமிழகத்தில் சென்னை - பெங்களூர் மற்றும் சென்னை - கோவை ஆகிய இரண்டு வந்தே பாரத் ரயில் இயங்கி வரும் நிலையில் சென்னை கன்னியாகுமரி இடையே வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் எழுப்பி உள்ளனர் 
 
ஏற்கனவே சென்னை மதுரை வந்தே பாரத் ரயில் குறித்த ஆலோசனை நடைபெற்று வரும் நிலையில் சென்னை கன்னியாகுமரி வரை அந்த ரயிலை நீடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
 
சென்னையில் இருந்து திருச்சி மற்றும் மதுரைக்கு அதிக ரயில்களை இயக்கப்படுகிறது என்றும் ஆனால் நெல்லை கன்னியாகுமாரி பகுதிகளுக்கு ஒரு சில ரயில்கள் மட்டுமே இயக்கப்படுவதாகவும் எனவே சென்னையில் இருந்து திருநெல்வேலி கன்னியாகுமரி போன்ற நகரங்களுக்கு செல்பவர்கள் வசதிக்காக சென்னை கன்னியாகுமாரி இடையே வந்தே பாரத ரயிலை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு வருகிறது. 
 
சென்னை மதுரை இடையே இயக்க இருக்கும் வந்தே பாரத் ரயில் கன்னியாகுமாரி வரை நீடிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை திடீர் சரிவு.. வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி..!

வாரத்தின் முதல் நாளில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் இன்று எவ்வளவு?

நேற்றும் இன்றும் என்றும் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்! இளையராஜாவுக்கு முதல்வர் வாழ்த்து..!

காய்ச்சல் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம்: கல்வி அலுவலகம் அறிவிப்பு..!

ஒரே ஒரு மாணவிக்காக செயல்படும் அரசுப்பள்ளி! மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments