Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபரிமலை சீசன்: சென்னையிலிருந்து இன்று இரவு சிறப்பு ரயில்

Webdunia
திங்கள், 20 நவம்பர் 2023 (17:00 IST)
சபரிமலை சீசனை முன்னிட்டு அவ்வப்போது சிறப்பு ரயில்களை இயக்கி வரும் தென்னக ரயில்வே இன்று இரவு சென்னையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.

சபரிமலை பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து எர்ணாகுளத்திற்கு  இன்று இரவு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இன்று இரவு 11:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் நாளை காலை 11:55 மணிக்கு  எர்ணாகுளம் சென்றடையும்.

இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர்,  பாலக்காடு, திருச்சூர், ஆலுவா வழியாக  எர்ணாகுளம் செல்லும்.  இந்த ரயிலுக்கான முன்பதிவு செய்யப்படுவதாகவும், தேவையான சபரிமலை பக்தர்கள் செய்து கொள்ளலாம் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

எனவே சபரிமலை செல்லும் பக்தர்கள் இந்த சிறப்பு ரயிலை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்றும் அனுமதி இல்லை: வனத்துறை முடிவால் பக்தர்கள் அதிருப்தி..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு: இன்றும் நாளையும் மழை பெய்யும் மாவட்டங்கள் எவை எவை?

அறிவாலயத்தின் வாசலில் எம்பி சீட்டுக்காக நிற்பவர் ப சிதம்பரம்: தமிழிசை செளந்திரராஜன்

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரிக்கையா? சட்ட அமைச்சர் விளக்கம்..!

வக்பு சட்டத்திருத்தம்: அம்பானியின் ரூ.15,000 கோடி வீட்டுக்கு ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments