Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையை அச்சுறுத்தும் புயல் காற்று, மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் வீசும் என தகவல்!!

Webdunia
வியாழன், 8 டிசம்பர் 2016 (10:18 IST)
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை போதிய அளவில் பெய்யவில்லை. மேலும் நாடா புயலும் ஏமாற்றியது. இந்நிலையில் வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 2 நாளில் புயலாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு வார்தா என்று பெயரிடப்படும். 


 
 
இந்த புயலால் அந்தமான் நிகோபார் தீவுகளில் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசும். இதனால் பலத்த மழை பெய்து, வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இந்த புயல் வரும் 11ஆம் தேதி, சென்னைக்கும், ஆந்திராவிற்கும் இடையே கரையை கடக்கிறது. அப்போது மணிக்கு 130கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யும். 
 
இதனால் பெரும் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதற்கிடையில் வரும் 11, 12 ஆகிய தேதிகளில் சென்னையில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

 

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments