Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை சில்க்ஸ் தீ விபத்து; கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்தது

Webdunia
புதன், 31 மே 2017 (19:45 IST)
சென்னை தி. நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர். இந்நிலையில் கட்டிடத்தின் முன்பகுதி சுவர் இடிந்து விழுந்தது.


 

 
சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் இன்று காலை 4 மணியளிவில் தீ பற்றியது. முதலில் அடித்தளத்தில் பற்றிய தீ, படிப்படியாக மற்ற தளங்களுக்கும் பரவியது. தற்போது அந்த கட்டிடத்தில் உள்ள 7 தளங்கலிலும் தீ பற்றி எரிகிறது. ஒரே புகை மூட்டமாக இருப்பதால், தீயணைப்பு வீரர்களால் உள்ளே சென்று தீயை அணைக்க முடியாமல் போராடி வருகின்றனர்.
 
ஒரு வழியாக தீயணைப்பு படையினர் கட்டிடத்தின் பின் பக்கம் உள்ள சுவரை உடைத்து உள்ளே தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். இந்நிலையில் கடையின் முன்பகுதி சுவர் இடிந்து விழுந்தது. 15 மணி நேரமாக தொடர்ந்து தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர். தற்போது வரை கட்டிடத்தில் தீ புகைந்து கொண்டே இருக்கிறது. தீயை அணைக்கும் வேலைகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. 
 
மேலும் காற்று வேகமாக வீசுவதால் தீ பரவக்க்கூடும் என சுவர் இடிந்து விழுந்த பகுதியில் காவல்துறையினர் யாரையும் அனுமதிக்காமல் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

விமான விபத்து.. மெடிக்கல் கல்லூரியில் தாய், மகளின் உடலை தேடி அலையும் இளைஞர்.. கண்ணீர் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments