Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திட்டியதால் விபரீதம்: நண்பரின் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த சமையல் தொழிலாளி

திட்டியதால் விபரீதம்: நண்பரின் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த சமையல் தொழிலாளி
, திங்கள், 1 செப்டம்பர் 2014 (07:54 IST)
சென்னை ராயபுரத்தில் சமையல் தொழிலாளியின் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது நண்பர் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து காவல்துயையினர் தரப்பில் கூறப்பட்டதாவது:-

“கொருக்குப்பேட்டை ஜே.ஜே. நகரைச் சேர்ந்தவர் குமார். சமையல் தொழிலாளி இவர், கடந்த 6 ஆம் தேதி ராயபுரம் சிங்காரத்தோப்பில் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

இது குறித்து ராயபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர். விசாரணையில், அவருடன் வேலை செய்த மாரியப்பன்தான் குமாரைக் கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து காவர்துறையினர், திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே உள்ள இலஞ்சியில் பதுங்கி இருந்த மாரியப்பனை சனிக்கிழமை பிடித்தனர்.

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், "சமையல் செய்யும் போது குமார் தன்னை அடிக்கடி திட்டுவார் என்றும், சம்பவத்தன்று குமாரும், தானும் ஒன்றாக மது அருந்தியபோது குமார் திட்டியதால், ஆத்திரம் அடைந்து குமாரின் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்ததாக“ மாரியப்பன் கூறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதைத் தொமடர்ந்து காவல்துறையினர் மாரியப்பனை கைது செய்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil