வேலையை காட்டும் வடகிழக்கு பருவமழை: சென்னை ரெய்ன்ஸ்!!

Webdunia
வியாழன், 17 அக்டோபர் 2019 (08:49 IST)
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. 
 
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் சென்னையின் புறநகர் பகுதிகளில் நேற்றிரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தாம்பரம், வண்டலூர் உள்பட பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்தது. நள்ளிரவு முதல் தொடந்த இந்த மழை அதிகாலையில் கிண்டி, ஈக்காட்டுதாங்கல், தி.நகர், அண்ணாநகர், திருவல்லிக்கேணி, விமான நிலையம், பல்லாவரம், அனகாபுத்தூர், பெருங்களத்தூர், குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூரிலும் கொட்டி தீர்த்தது. 
 
நல்ல மழையின் காரணமாக சாலையில் நீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். சென்னை மட்டுமின்றி தூத்துக்குடி, கோவில்பட்டி, திருப்பூர், நெல்லை, தென்காசி ஆகிய இடங்களிலும் கனமழை பதிவாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்க்கட்சித் தலைவராக தேஜஸ்வி யாதவ் தேர்வு.. எம்எல்ஏ கூட்டத்தில் ஒருமனதாக முடிவு..!

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்தால் இந்தியாவுக்கு 500% வரி விதிப்பேன்.. ட்ரம்ப் மிரட்டல்..!

விஜயுடன் கூட்டணியா?... செங்கோட்டையன் பரபர பேட்டி!..

மரண தண்டனையை கண்டு பயம் இல்லை!.. ஷேக் ஹசீனா ஆவேசம்!..

வாக்காளர் பட்டியல் திருத்தம் 'மற்றொரு பணமதிப்பிழப்பு': அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு

அடுத்த கட்டுரையில்
Show comments