Webdunia - Bharat's app for daily news and videos

Install App

95% மழைநீர் வடிந்தது, சுரங்கப்பாதையில் சிக்கிய பேருந்து: இருவேறு செய்திகளால் மக்கள் குழப்பம்

Webdunia
செவ்வாய், 1 நவம்பர் 2022 (19:02 IST)
95% மழைநீர் வடிந்தது, சுரங்கப்பாதையில் சிக்கிய பேருந்து: இருவேறு செய்திகளால் மக்கள் குழப்பம்
கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்த கன மழை காரணமாக சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் மழைநீர் தேங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன
 
ஆனால் ஆளுங்கட்சிக்கு ஆதரவான சில பத்திரிகைகள் சென்னையில் மழை நீர் சுத்தமாக வடிந்து விட்டது என்றும் சென்னையில் முக்கிய சாலைகளில் மழை நீரே இல்லை என்றும் செய்திகள் வெளியிட்டு வருகின்றன 
 
ஆனால் நெட்டிசன்கள் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு சென்னையின் பல பகுதிகளில் இன்னும் மழைநீர் தேங்கி உள்ளதாக தெரிவித்து வருகின்றனர் 
 
சென்னையில் 95% மழை நீர் வடிந்தது என்று துணை மேயர் மகேஷ்குமார் கூறிய ஒரு சில நிமிடங்களில் வியாசர்பாடி சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் மாநகர பேருந்து ஒன்று சிக்கியதாக தகவல் கொண்டது
 
இதனை அடுத்து தீயணைப்பு படையினர் விரைந்து அந்த பேருந்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டனர். ஒரு பக்கம் சென்னையில் மழை நீர் வடிந்து விட்டது என்ற செய்தியும் இன்னொரு பக்கம் மழைநீரில் பேருந்து சிக்கியது என்ற செய்தியும் வெளியாகி கொண்டிருப்பது பொதுமக்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுபட்டவர்களுக்கு ரூ.1000 மகளிர் உதவித்தொகை .. துணை முதல்வர் உதயநிதி முக்கிய அறிவிப்பு..!

புதுமண தம்பதிகளை ரொம்ப தூரத்திற்கு தேனிலவுக்கு அனுப்பாதீர்கள்: மத்திய பிரதேச முதல்வர்..!

விஜய் எங்க வீட்டுப் பையன்.. கூட்டணி பற்றி அவர்தான் சொல்லணும்! - பிரேமலதா பிடிக்கும் புது ரூட்?

கொஞ்சம் ஓவரா பேசிட்டேன்.. மன்னிச்சிடு நண்பா! - ட்ரம்பிடம் மன்னிப்பு கேட்ட எலான் மஸ்க்!

திமுக எடுத்த ரகசிய சர்வே.. 2026 தேர்தல் முடிவு இந்த மூன்றில் ஒன்றுதான்: பத்திரிகையாளர் மணி

அடுத்த கட்டுரையில்
Show comments