Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
, திங்கள், 5 அக்டோபர் 2015 (21:26 IST)
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு  வெடிகுண்டு வைத்துள்ளதாக, அது விரைவில், வெடிக்கும் என மர்ம நபர் கூறி, தொடர்பை துண்டித்துள்ளார். 
 
இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ரயில்வே போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.
 
மேலும், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் ரயில் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால், வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை.
 
ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

Share this Story:

Follow Webdunia tamil