Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 லட்சம் பத்தாது.. 16 லட்சம் குடுங்க! – கொரோனா நோயாளியை அதிர்ச்சிக்குள்ளாக்கிய மருத்துவமனை!

Webdunia
வியாழன், 30 ஜூலை 2020 (08:39 IST)
சென்னையில் உள்ள தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளியிடம் 16 லட்சம் மருத்துவ கட்டணம் கேட்கப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சூளைமேடு பகுதியில் வசித்துவரும் மகேந்திரன் என்பவர் அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கொரோனா தொற்று இருந்ததால் அருகிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளனர்.

கொரோனா சிகிச்சைக்கு மொத்தமாக ரூ.5 லட்சம் செலவாகும் என மருத்துவமனை நிர்வாகம் கூற, மனோகரனின் குடும்பத்தினரும் பணத்தை செலுத்தியுள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த மனோகரன் நலம் பெற்றுள்ளதாக கூறிய மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு இதயத்தில் ஏதோ பிரச்சினை இருப்பதாக கூறி வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கூறியிருக்கிறார்கள்.

மேலும் மீதமுள்ள சிகிச்சை கட்டணம் 11 லட்சத்தை கட்டுமாறு கூறியுள்ளார்கள். இதனால் மனோகரன் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். முதலில் 5 லட்சம்தானே சொன்னீர்கள் என கேட்க அதற்கு தனியார் மருத்துவமனை சரியான விளக்கத்தை அளிக்காமல் பணத்தை கட்ட வற்புறுத்தியுள்ளனர். இதனால் மனோகரனின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு விரைந்த போலீஸார் இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’வணக்கம் சோழ மண்டலம்’.. சிவனை வழிபடுபவன் சிவனில் கரைகிறான்! - பிரதமர் மோடி பேச்சு!

ஓலைச்சுவடி படிக்கும் தஞ்சை மணிமாறன்! - மன் கீ பாத்தில் புகழ்ந்து வாழ்த்திய பிரதமர் மோடி!

துணை முதலமைச்சர் பதவி! ஆசைக்காட்டினால் சென்று விடுவேனா? - திருமாவளவன் பரபரப்பு பேச்சு!

நாளை மறுநாள் சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு.. நிறைபுத்தரிசி பூஜை தேதியும் அறிவிப்பு..!

கல்லூரி மாணவர்கள் விடுதியில் 5000 கஞ்சா சாக்லேட்டுக்கள்.. சென்னை அருகே அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments