Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்றும், நாளையும் மின் தடை! – எந்தெந்த பகுதிகளில்?

Webdunia
திங்கள், 6 பிப்ரவரி 2023 (09:44 IST)
சென்னையில் இன்று மற்றும் நாளை பராமரிப்பு பணிகளுக்காக சில பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

காலை 9 மணிக்கு மின்விநியோகம் நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் முடிந்து மதியம் 2 மணிக்கு மீண்டும் மின் விநியோகம் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது,

அதன்படி இன்று (06.02.2023) அடையாறு பகுதியில் உள்ள எஞ்சம்பாக்கம் ஷாலிமார் தோட்டம், பெரியார் தெரு, பஜனை கோவில் தெரு, கங்கை அம்மன் கோவில் தெரு, வால்மீகி தெரு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

நாளை (07.02.2023) அன்று ஏழு கிணறு, பல்லாவரம், சோழிங்கநல்லூர், ஐயப்பந்தாங்கல், ஆவடி மற்றும் பெரம்பூர் பகுதிகளில் பல இடங்களில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments