Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூட்டப்பட்ட அரசு மருத்துவமனை கழிப்பறைகள்: தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்

Webdunia
புதன், 19 ஜூன் 2019 (09:22 IST)
தண்ணீர் இல்லாதா காரணத்தால் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் கழிப்பறைகள் பூட்டப்பட்டுள்ளது நோயாளிகளுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கடந்த சில மாதங்களாக மழை பொய்த்து போனதால் கடுமையான தண்ணீர்ப்பஞ்சம் நிலவி வருகிறது. தண்ணீர் பிரச்சனை காரணமாக பல ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளதாகவும், ஒருசில ஓட்டல்களில் மதிய சாப்பாடு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. 
 
அதேபோல் ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் பெரும்பாலானோர் வீட்டில் இருந்தே பணிபுரியும்படி அறிவுறுத்தப் பட்டுள்ளதாகவும், ஒருசிலர் வேறு கிளைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், இதனால் சென்னையில் உள்ள பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் மூடப்படும் நிலையில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
தண்ணீர் பஞசத்தின் உச்ச கட்டத்தால் மெட்ரோவில் கழிப்பறைகளும் மூடப்பட்டதாம், அந்த வரிசையில் தற்போது ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் தண்ணீர் இல்லாத காரணத்தால் பல கழிப்பறைகள் பூட்டப்பட்டுள்ளது நோயாளிகளுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தியுள்ளது 
 
தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் நோயாளிகள் சிகிச்சைக்காக இங்கு வரும் நிலையில் கழிப்பறைகளுக்கு பூட்டு போட்டு வைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையின் இந்த நிலைமையை விரைவில் சரிசெய்ய வேண்டும் என்பது நோயாளிகளின் கோரிக்கையாக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்தி தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments